காவல் நிலையத்தில் காணாமல் போன சந்தனமரம்!
Subscribe to Oneindia Tamil
மூணாறு: மூணாறு அருகே உள்ள மறையூர் காவல் நிலையத்தில் வளாகத்தில் இருந்த சந்தன மரம் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறு அருகே உள்ள மறையூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் 250 கிலோ எடை கொண்ட சந்தனமரம் ஒன்று இருந்தது.
நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மின்சாரம் தடைப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிவர் சந்தனமரத்தை வேருடன் வெட்டி எடுத்து சென்று விட்டனர்.
காவல் நிலையத்த்திலேயே சந்தன மரம் காணமல் போன சம்பவம் பெரும் அதிரிச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications