For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்த்ரயான் விண்கலத்தின் சென்சார் பழுதானது-தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்!

By Staff
Google Oneindia Tamil News

Chandrayaan
பெங்களூர்: இந்தியா மிகப் பெரும் ஆராவாரத்துடன் நிலவுக்கு அனுப்பிய சந்த்ரயான்-1 விண்கலத்தின் முக்கிய சென்சார் பழுதடைந்துவிட்டது. இதனால் அந்த விண்கலமே பயனில்லாமல் போகும் என்று தெரிகிறது.

நிலவை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த விண்கலத்தை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

இந்தக் கலத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு துணைக் கலம் நிலவைத் தொட்டது. அதே நேரத்தில் சந்த்ராயன்-1 விண்கலம் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றிவந்தபடி படங்கள் எடுத்தும், நிலவின் வளி மண்டலத்தில் சில ஆய்வுகளையும் நடத்தி வந்தது.

இந் நிலையில் அதன் 'ஸ்டார் சென்சார்' பழுதடைந்துவிட்டது.

இந்த ஸ்டார் சென்சார் தான் சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவை நோக்கி திரும்பியிருக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாகும். இது பழுதடைந்துவிட்டதால் சந்த்ராயனின் கேமராக்கள் நிலவை விட்டு வேறு பக்கமாக திரும்பிவிட்டன.

இதையடுத்து சந்த்ராயனில் உள்ள ஆன்டெனா உதவியாலும், கைராஸ்கோப்கள் உதவியாலும் விண்கலத்தை நிலவை நோக்கித் திருப்பியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். ஆனால், சென்சார் உதவியில்லாமல் தொடர்ந்து நீண்ட நாட்கள் இப்படியே வைத்திருக்க முடியாது.

எனவே 2 ஆண்டுகள் நிலவை ஆராயும் வகையில் உருவாக்கப்பட்ட சந்த்ராயனின் ஆயுட்காலம் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று கருதப்படுகிறது.

(பழங்காலத்தில் முக்கிய நட்சத்திரங்களை வைத்து முன்னோர்கள் திசைகளை அறிந்தது மாதிரி, சந்த்ராயனில் உள்ள ஸ்டார் சென்சாரும் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து நிலவி்ன் திசையை உணர்ந்து, விண்கலத்தை அதை நோக்கி திருப்பும் கருவியாகும்).

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X