துப்புறவுத் திட்டம்- தமிழகத்திற்கு ரூ. 67 கோடி
டெல்லி: மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் ஒட்டுமொத்த துப்புறவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரூ. 209.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கு ரூ. 67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
3 மாநிலங்களையும் சேர்ந்த 65 மாவட்டங்கள் இந்தத் திட்டத்தினால் பலனைடயும்.
இந்த நிதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் குடிநீர் மற்றும் துப்புறவு வாரியங்கள் மூலம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு அதிகபட்சமாக ரூ. 110.78 கோடி நிதியும், தமிழகத்திற்கு ரூ. 66.66 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ. 37.14 கோடியும் ஒதுக்கப்படும்.
கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டனம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.