இந்திய எல்லையில் 5 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த ஐந்து இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் நடீசன் (20), சந்தனன் (38), சூரஜ் ( 33) உள்ளிட்ட ஐந்து இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த 2 ம் தேதி மாத்தரை பகுதியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கடலோர காவல் படையினர் ஐந்து மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஐவரும், படகோடு, மண்டபத்தில் உள்ள கடலோர
காவல் படை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
போலீசாரின் விசாரணைக்குப் பிறகு அவர்கள் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications