அக்டோபரில் தீபாவளி-ரயில்களி்ல் இன்றே டிக்கெட் காலி
சென்னை: வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான தொலைதூர ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
90 நாட்களுக்கு முன் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யலாம் என்ற நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தமிழக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கியவுடன் தீபாவளிக் கூட்டம் குவிந்தது.
அடுத்த 15 நிமிடங்களி்ல் அக்டோபர் 16ம் தேதிக்கான டிக்கெடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் ஒரு டிக்கெட் கூட மிஞ்சவில்லை.
டிராவல் ஏஜென்டுகள் புகுந்து விளையாடிதால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டதாக புகார் கூறப்படுகிறது.
அக்டோபர் 16ம் தேதிக்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. அதுவும் நிமிடங்களில் விற்றுவிடும் என்று தெரிகிறது.
இதனால் தீபாவளியையொட்டி கோவை மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications