சத்யம் - 4 இயக்குநர்களை திரும்பப் பெற்றது அரசு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சத்யம் நிறுவனத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 6 இயக்குநர்களில் நான்கு பேரை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பெரும் மோசடிகளைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பழைய இயக்குநர்களை நீக்கிவிட்டு, கிரண் கார்னிக், தருண் தாஸ், சூர்ய காந்த் பாலகிருஷ்ண மைனாக், மனோகரன் மற்றும் அச்சுதன் ஆகியோரை நியமித்தது.
இந் நிலையில், சத்யம் நிறுவனத்தை டெக் மஹிந்திரா நிறுவனம் வாங்கிவிட்டது.
வாங்கிய கையோடு நிர்வாகக் குழுவையும் அடியோடு மாற்றி வருகிறது சத்யம் நிறுவனத்தின் புதிய நிர்வாகம். இந்நிலையில் மன மனோகரன் மற்றும் சி அச்சுதன் தவிர மற்ற நான்கு இயக்குநர்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
புதிய இயக்குநர்களை சத்யம் இனி நியமித்துக் கொள்ளும்.












Click it and Unblock the Notifications