கோவையில் என்.இ.பி.ஸி.யின் சிறப்பு பொருளாதார மண்டலம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதில் முக்கிய நிறுவனமாகத் திகழும் என்இபிஸி இந்தியா விரைவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கிறது.
இதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தின் கோவைக்கு அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவுள்ளது.
மேலும் ரூ.50 பில்லியன் முதலீட்டில் உருவாகும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மெல்லிய சோலார் படச் சுருள்கள் (PV) போன்ற உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையையும் என்இபிஸி அமைக்கிறது.
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் அளவுக்கு சிறப்பான வசதிகளை இதில் ஏற்படுத்தித் தரப்போகிறதாம் என்இபிஸி.












Click it and Unblock the Notifications