இடைத் தேர்தல்: கட்சியினருடன் வைகோ ஆலோசனை
கரூர்: சட்டசபை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது குறித்து மாநில இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டரணியினருடன் கட்சி பொதுச் செயலாளர் வைகோ கரூரில் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2006 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணன் , தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கண்ணப்பன் ஆகிய இருவரும் மதிமுகவில் இருந்து விலகி தி.மு.க. வில் இணைந்தனர்.
இதனால், இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் ம.தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என்று அக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமையிடம் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க கரூரில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசினார். இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து கேட்டார்.
அதே போன்று கோவை அவினாசியில் கோவை மாநகர, புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் ம.தி.மு.க.போட்டியிட வேண்டும் என, அம் மாவட்ட கட்சியினர் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications