கேரளா-குஜராத்-ஒரிஸ்ஸாவில் கனமழை
அகமதாபாத்: குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுநதுள்ளது.
குஜராத் தவிர தாமன், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
குஜராத்தின் போர்பந்தர், ஜுங்காபாத் மாவட்டங்களில் 28 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப் பகுதியில் ஒரே நாளில் 548 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஒரிஸ்ஸா மற்றும் கேரளாவிலும் 2 வாரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
ஒரிஸ்ஸாவில் மழை வெள்ளத்துக்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.
கேந்தரவாரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள். காஞ்சர் மாவட்டத்தில் மரம் விழுந்து சிறுமி பலியானார். கந்தர்கார் மாவட்டத்தில் வீட்டு சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
இங்கு பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹீராகுட் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏலக்காய் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications