ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்-பாஜக
சென்னை: மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் உள்ள முகாம்களில் 2.8 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் 50,000 பேர் குழந்தைகள். அந்த முகாம்கள் எப்படி இருக்கின்றன என்று உலக அளவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அதிர்ச்சியான செய்திகளில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அவர்களுக்கு போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை. குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. முகாம்களில் சுகாதாரம் இல்லை.
விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அப்பாவி தமிழ் மக்களை பற்றி கவலையடைகிறோம். அந்த மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்து வகை சுதந்திரமும், கல்வி மற்றும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
3வது அணி ஒரு வேகத்தடை போன்றது. அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.
தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை பல நிபுணர்கள் செய்முறை விளக்கத்தோடு நிரூபித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் ஹைதராபாத்தில் ஒரு பூத்தில் உள்ள மின்னணு ஓட்டு எந்திரத்தில் யார் ஓட்டு போட்டாலும் அதில் எங்கள் தாமரை சின்னத்தில் மட்டுமே ஓட்டு பதிவானது. இதைத் தொடர்ந்து அங்கு மறுநாள் மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.
எனவே மீண்டும் வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அதே நேரத்தில் மின்னணு ஓட்டு எந்திரத்திலும் வாக்களிக்க வேண்டும். அதாவது இரண்டிலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓட்டு எண்ணும்போது சந்தேகம் வரும்போது வாக்குசீட்டை பார்க்கலாம்.
எனவே மின்னணு ஓட்டு எந்திர குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளி்ன் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்றார் நாயுடு.
-
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications