தொண்டாமுத்தூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் தனித்து போட்டி
பொள்ளாச்சி: வரும் சட்டசபை இடைத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளதாக கொங்கு நாடு முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக் கட்சியின் மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில்,
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இந்திய அரசியல் அளவில் பேசக் கூடிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு அடுத்து தவிர்க்க முடியாத கட்சியாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் விளங்குகிறது. கொங்கு நாடு முன்னேற்ற கழக கட்சியின் வளர்ச்சியை கண்டு மாற்றுக் கட்சியினர் கூட வியந்து போகின்றனர்.
கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் தான் வரும் காலத்தில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 2011-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இப்போது இருந்தே நாம் எதிர் கொள்ள வேண்டும். வரும் இடைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கொ.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடும்.
வேட்பாளர் யார் என இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications