இலங்கை கெடுபிடி-அலுவலகங்களை மூடிய ரெட்கிராஸ்
கொழும்பு: இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து செஞ்சிலுவைச் சங்கம் தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது. இந்த நான்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்தன.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதாபிமான தேவைகள் இருப்பின் அவற்றைப் பூர்த்தி செய்யும் பணியில் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்கரைப்பட்டு, மட்டக்களப்பு, முத்தூர், திரிகோணமலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த எங்களது அலுவலகங்களை மூடியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் செய்து வந்த அயராத பணிகளால் எரிச்சல் அடைந்த இலங்கை அரசு, போர் முடிந்து விட்டதால் உங்களது பணிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என கடந்த மாதம் உத்தரவிட்டது.
உயிரிழந்த அப்பாவித் தமிழர்கள் குறித்தும், பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் வெளிப்படையாக செஞ்சிலுவைச் சங்கம் பேசி வந்ததை இலங்கை அரசு விரும்பவில்லை.
மேலும், இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று சேவை செய்ய செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து அனுமதி கோரி வந்தது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாகவும் இரு தரப்புக்கும் இடையிலான உறவு கசந்தது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை திறந்த வெளி சிறைச்சாலையைப் போன்ற முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு முழுமையான அளவில் சேவையாற்ற யாரையும் அனுமதிக்காத இலங்கை அரசு தற்போது சேவை நிறுவனங்களின் சேவையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications