மாணவியை படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
சென்னை: சட்டக் கல்லூரி மாணவி தன்னுடன் நெருக்கமாக பேசியதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி மிரட்டிய நபரை, மாணவியின் சக நண்பர்கள் சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராம். கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றும் இவர், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மும்தாஜ் என்ற மாணவியைக் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் மும்தாஜைப் பார்க்க கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது ராமை, மும்தாஜுடன் படிக்கும் மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராமும், மும்தாஜும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் வந்துள்ளனர். அப்போது அவற்றை செல்போனில் படம் பிடித்துக் கொள்வாராம் ராம்.
இந்த நிலையில் ராமின் போக்குப் பிடிக்காத மும்தாஜ், இனிமேல் பழக வேண்டாம், பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
இதனால் கோபமடைந்த ராம், நேற்று சட்டக் கல்லூரிக்கு வந்து மும்தாஜை சந்தித்து என்னுடன் பேசாவிட்டால் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று மிரட்டினாராம்.
இதைப் பார்த்து அருகில் இருந்த மும்தாஜின் நண்பர்கள் கோபமடைந்து ராமை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தி்ல ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் புகார் கொடுக்க விரும்பாததால், இதை சுமூகமாக தீர்த்து வைத்து அனுப்பி விட்டனர் போலீஸார்.
-
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications