கோவை-தலையை வெட்டி கொடூர கொலை
கோவை: கோவை அருகே தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிவிட்டது.
கோவை அருகே உள்ளது பெரியநாயக்கன் பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல் பணி முடிந்து ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிற்கு மோட்டார்
சைக்கிளில் சென்றார்.
அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டியது. இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், ஹரிகிருஷ்ணன் தலையை தனியாக வெட்டி எடுத்து அருகில் உள்ள தோட்டத்துக்குள் வீசி விட்டு தப்பி சென்றது.
பின்பு, போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ஹரிகிருண்ணன் கொலை செய்யப்பட்டதையும், முடிந்தால் தலையையும், உடலையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மர்ம நபர் போனில் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று தேடிய போது தனித்தனியாக வீசப்பட்டு கிடந்த ஹரிகிருஷ்ணன் உடலையும், தலையையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கொலை செய்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.