எம்எல்ஏ காரை தடுத்த போலீஸ்காரருக்கு அடி-உதை!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயன்ற திமுக எம்.எல்.ஏ.வின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்சாருக்கு அடி உதை விழுந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் துரை சந்திரசேகரன்.

இவர் நேற்று திருவையாறில் இருந்து தஞ்சாவூர் நோக்கி குவாலிஸ் காரில், தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.

தஞ்சை அரண்மனை பகுதியிலிருந்து கீழராஜ வீதி வழியாக, பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் பாதை ஒரு வழிப்பாதை வழியாக எம்எல்ஏவின் கார் செல்ல முயன்றது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மதி, காரை தடுத்து நிறுத்தினார்.

எம்எல்ஏவின் கார் எண்ணை அவர் குறிப்பெடுக்க முயன்றபோது, துரை சந்திரசேகரனும், அவருடன் வந்தவர்களும், காரை
நிறுத்தி அந்த போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்தனர். மேலும் செறுப்பால் அடிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, காரில் வந்த அடையாளம் தெரிந்த, பெயர்
தெரியாத நால்வர் தன்னை செருப்பால் அடிக்க முயன்றவதாக காவலர் மதி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தார்.

எம்எல்ஏவின் கார் என்று தெரிந்தம் அந்த காரை நிறுத்தி, ஒரு வழிப்பாதையில் செல்லவிடாமல் தடுத்த போலீஸ்காரர் மதிக்கு, எஸ்பி செந்தில்வேலன் ரொக்கப் பரிசு கொடுத்து கெளரவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+