ஆங் சான் சூ கிக்கு மகாத்மா காந்தி சர்வதேச விருது

அமைதிக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க அவர் செய்த தியாகங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது. சூ கி சார்பில் மியான்மாரைச் சேர்ந்த தியென் வின் இந்த விருதைப் பெற்றுக் கொணாடார். இவர் நாடு கடத்தப்பட்ட மியான்மார் பிரதமர் ஆவார்.
டர்பன் சிட்டி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் வழங்கினார்.
தனது அஹிம்சை, அமைதியான போராட்டத்தால் ராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களுடன் போராடி வருவபர் சூ கி.
இந்த விருதை வழங்குவது குறித்து சூ கியிடம் தெரிவிக்குமாறு தென் ஆப்பிரிக்காவில் உள்ள மியான்மார் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியது இந்த அறக்கட்டளை. ஆனால், அந்தக் கடிதத்தை திறந்து கூட பார்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளது தூதரகம்.
இதனால் இந்த விருது வழங்கப்பட்டது கூட சூ கிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.












Click it and Unblock the Notifications