கலாமிடம் மன்னிப்பு கேட்டது காண்டினென்டல்!

கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் சென்ற கலாமுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. அவரது ஷூவையும் கழற்றச் செல்லி சோதனையிட்டுள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இதற்கு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புபப் படையான சிஐஎஸ்எப் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தபோதும் கூட இந்தச் சோதனையை அமெரிக்க ஊழியர்கள் மேற்கொண்டனர்.
அப்போது மத்திய படை வீரர்களை கலாம் அமைதி்ப்படுத்திவிட்டார். ஆனாலும் கலாமுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சிஐஎஸ்எப், விமான போக்குவரத்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை காண்டினென்டல் ஏர்லைன்சிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் பதில் தரவில்லை.
இந் நிலையி்ல் இது குறித்து நேற்று தகவல் பரவியதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கின. இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்பதாகவும், காண்டினென்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்தார்.
தொடர்ந்து காண்டினென்டல் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். மேலும் அப்துல் கலாமை சோதனையிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டது.
இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விமான நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனையில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதையும் மீறி சோதனை நடத்தியதால், விமான சட்டத்தின் 11(ஏ) பிரிவின்கீழ் இந்த வழக்குப் பதிவானது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந் நிலையில் தனது செயலுக்கு முதலில் திமிராக பதிலளித்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. யாராக இருந்தாலும் சோதனை நடத்துவோம் என்று நேற்று இந்த நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தங்களது செயலுக்காக இன்று அப்துல் கலாமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம். அவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை. விதிகளைப் பின்பற்றினோம். அவ்வளவு தான். இருந்தாலும் கலாமுக்கு இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications