ஐபிஎஸ்-15% பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் உள்ள மொத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் 15 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மக்களவையில் அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான்,
கடந்த ஜனவரி மாத கணக்குப்படி நாடு முழுவதும் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,327. இதில் 328 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் 157 பேர் பழங்குடியின சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
இது மொத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் ஆகும். மொத்தமுள்ள 3,327 ஐபிஎஸ் அதிகாரிகளில் 2,378 பேர் தேர்வெழுதி நேரடியாகவும், 949 பேர் பதவி உயர்வு மூலமும் ஐபிஎஸ் அந்தஸ்தை பெற்றவர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications