தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

சில அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சர் பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்த நிலையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது சரியாகப் பணியாற்றாத அமைச்சர்களுக்கு முதல்வர் கருணாநிதி டோஸ் விட்டதாகத் தெரிகிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, சில அமைச்சர்கள் பொறியியல் கல்லூரிகளை கட்டி வருவது குறித்துக் குறிப்பிட்டு கட்சிக்காக தானும் தலைவர்களும் பட்டபாட்டை விளக்கியதோடு, இப்போது பலரும் சுயநலத்துடன் செயல்படுவதை சுட்டிக் காட்டி கடுமையாக எச்சரித்தாராம். இதில் ஒரு சிலருக்கு தனிப்பட்ட முறையிலும் எச்சரிக்கை தரப்படதாம்.
இதனால் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இப்போது தன் வசம் உள்ள பொதுப்பணித் துறையை இன்னொரு மூத்த அமைச்சரிடம் கூடுதலாக வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதே போல சில திமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்கிறார்கள்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு ஊரக வளர்ச்சித் துறை, நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் திட்டம், கல்வித்துறை, வீட்டுவசதித் துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளின் பிரச்சனைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications