காந்தி சிலை வாயில் நோட்டு-அதிமுக கவுன்சிலர் கைது!
திண்டிவனம்: திண்டிவனத்தி்ல் காந்தி சிலையை அவமரியைதை செய்த விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலையின் கண்களி்ல் கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, சிலையி்ன் வாயில் 10 ரூபாய் நோட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதன் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் காங்கிரஸ் தலைவர் சோனியா நோட்டுக் குவியலில் அமர்ந்திருப்பது போலவும் முதல்வர் கருணாநிதி மற்றும் பலர் வரிசையில் சென்று அந்தப் பணத்தைப் பெறுவது போலவும் படம் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும் அதன் அருகே அருகே ''ஜனநாயக நாட்டில் பணநாயகத் தேர்தல். காந்தி போட்ட நோட்டுக்கு வரப் போகிறது தேர்தல். புறக்கணிப்போம்.. புறக்கணிப்போம்'' என்றும் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்தச் செயலைச் செய்தது திண்டிவனம் நகர்மன்றத்தின் 5வது வார்டு கவுன்சிலர் சேகர் என்று தெரியவந்தது. இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார்.
இதையடுத்து இன்று காலை சேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயலில் இவருக்கு துணையாக இருந்த மேலும் சில அதிமுகவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.