மகாராஷ்டிர ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு-பலர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காந்திபார் என்ற இடத்தில் ஒரு பழைய ரசாயன ஆலையில் இருந்து நேற்றிரவு விஷ வாயு கசிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாயுவை சுவாதித்த பலருக்கும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. இந்த சம்பவம் போபால் விஷ வாயு சம்பவத்தை நினைவூட்டியதால் அந்த ஊரைச் சேர்ந்த 35,000 மக்கள் பீதியில் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர்.
இப்போது வாயுக் கசிவு நின்றுவிட்டதாகவும் மக்கள் ஊர் திரும்பலாம் என்றும் அந் நகர மேயர் அறிவித்துள்ளார். கசிந்தது என்ன வாயு என்று உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications