தமிழகத்தி்ல் மேலும் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

இந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு்ள்ளன.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் லட்சுமி தேவி கூறுகையி்ல்,
விமானத்திலிருந்து இறங்கியபோதே 2 குழந்தைகள் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் இருமல், காய்ச்சல் என சில அறிகுறிகள் இருந்தன.
இதையடுத்து அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களது ரத்த, சளி, உமிழ்நீர் மாதிரிகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் கிடைக்கும் என்றும் அதுவரை அவர்கள் மருத்துமனையிலேயே வைக்கப்படுவர்.
இவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதியானால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும், நோய் இல்லாவிட்டால் உடனடியாக திருப்பி அனுப்பபடுவார்கள் என்றார்.
ஏற்கனவே லண்டனில் இருந்த வந்த ஒருவருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இப்போது தண்டையார்பேட்டை மருத்துமனையி்ல் பன்றிக் காய்ச்சல் தொடர்பாக ஒரே நேரத்தில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு வாலிபர் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த உறவினரைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தபோது அவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்தவருக்கு இந்த நோய் தாக்குதல் இருந்து 3 நாள் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரைப் பார்க்கப் போன வாலிபருக்கு நோய் தாக்கியது.
பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவு:
இதற்கிடையே ஸ்வைன் ப்ளூவால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தால் அவர்களை உடனடியாக விடுமுறையில் அனுப்ப வேண்டும் என்று மத்திய நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இத் துறையின் அமைச்சர் குலாம் நபி ஆசாத், மத்திய மனிதவளத்துறை மூலம் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, மாநில கல்வித்துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,
ஸ்வைன் ப்ளூ நோயால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தால் உடனடியாக அவர்களது பெற்றோரை அழைத்து விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர்களை உடனடியாக விடுமுறையில் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications