சென்செக்ஸ் இன்று 'டல்'!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் டல்லடித்தது. முக்கியப் பங்குகளின் விலைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. ஆனாலும் வர்த்தக நேர முடிவில் 3 புள்ளிகளை மட்டும் இழந்திருந்தது சென்செக்ஸ்.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 3 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
காலையில் வர்த்தகம் ஆரம்பித்தபோது 89 புள்ளிகள் கூடுதலாக இருந்த சென்செக்ஸில், நேரம் செல்லச் செல்ல ஊசலாட்டம் தொடர்ந்தது. பிற்பகலுக்குப் பிறகே ஓரளவு சீரான நிலை ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், டாடா பவர், டிஎல்எப், டாட ஸ்டீல் மற்றும் டாடா மோட்டாஸ் போன்றவை நல்ல லாபத்தில் கைமாறின.
ஆனால் முன்னணி பங்குகளான ரிலையன்ஸ், ஓஎன்ஜிஸி, ஹீரோ ஹோண்டா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.












Click it and Unblock the Notifications