25 ஆண்டுக்குப் பின் கொச்சி-கொழும்பு கப்பல்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ளது.
இதுதொடர்பான முடிவு கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற சார்க் அமைப்பின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், இந்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தலைமையிலான தூதுக் குழு கலந்து கொண்டது. இந்தக் குழு, இலங்கை போக்குவரத்து அமைச்சர் அழகப்பெருமாவுடன் பேசியது.
அதன் பின்னர் அழகப்பெருமா செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்கை அளவில் கொச்சி- கொழும்பு கப்பல் சேவைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு. கடந்த ஆண்டு நடந்த சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டின்போது இதுகுறித்து பேசப்பட்டது.
அப்போது இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு இசைவு தெரிவித்துள்ளது இந்தியா என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 1985ம் ஆண்டுடன் நின்று போனது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த சண்டையால் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது இயலாமல் போனது.
இந்த நிலையில், கொழும்பு - தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த யோசனை கைவிடப்பட்டது. தற்போது கொச்சியிலிருந்து கொழும்புக்கு கப்பல் விடப் போகிறார்கள்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications