வணிக வரி மூலம் ரூ. 22,000 கோடி வசூல்
மதுரை: வணிக வரித்துறை மூலம்,கடந்தாண்டு 22ஆயிரத்து 570 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரித்துறை அமைச்சர் உபயதுல்லா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவு வணிகர்கள் சங்க 19 வது ஆண்டு விழா, தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உபயதுல்லா கலந்து கொண்டு பேசுசினார்.
அப்போது அவர் பேசுகையில்
தமிழகத்தில் கடந்தாண்டு வணிக வரியாக 22 ஆயிரத்து 570 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு வருவாய் குறைவாகவுள்ளது. இதற்கு பொருளாதார மந்த நிலை தான் காரணம். விலைவாசி உயர்வால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கம்ப்யூட்டர் மூலம் வணிக வரி ரிட்டன்களை இ - பைலிங் மூலம் தாக்கல் செய்வது சோதனை அடிப்படையில் உள்ளது. மேலும் வரி செலுத்துவதற்கு ஏதுவாக விரைவில் வணிகவரித்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications