For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவனந்தபுரம்-13 பேர் நெல்லை கொலை கும்பல் கைது
திருவனந்தபுரம்: கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேர் கொண்ட நெல்லை கும்பல் திருவனந்தபுரத்தில் சிககியுள்ளது.
திருவனந்தபுரத்தில் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஒரு லாட்ஜில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 13 பேர் தங்கி இருந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் இந்த 13 பேரும், 5 பேரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தாங்கள் விடுதியில் தங்கியிருந்து கையெழுத்துப் போடுவதற்காக வந்தோம் என்று அந்த 13 பேரும் போலீஸாரிடம் கூறினர்.
ஆனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Comments
arrest கைது nellai நெல்லை கொலை வழக்கு kerala கேரளா murder case திருவனந்தபுரம் கும்பல் gang trivandrum
Story first published: Tuesday, July 28, 2009, 17:32 [IST]