சிறை அதிகாரிகள் துன்புறுத்தல் - நளினி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி கடந்த 3 நாட்களாக வேலூர் மகளிர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார் நளினி. ஒரு பெண் கைதிக்கு சிறை அதிகாரிகள் அளித்த தண்டனையை வெளியே சொன்னதால், தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்க வேண்டும், சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறை வளாகத்தில் சலசலப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications