கிங்பிஷ்ஷர் ஊழியர்களுக்கு சம்பளம் 'லேட்'!

இந்த மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் தாமதமாகத்தான் சம்பளம் கிடைக்கும் என்றும் ஊழியர்கள் அனைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கிங்பிஷ்ஷர் நிறுவன துணைத் தலைவர் ஹிதேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிங்பிஷரில் பணிபுரியும் 6000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை மின்னஞ்சலாக அனுப்பியுள்ளார் பட்டேல்.
மேலும் செலவுக்க குறைப்பின் ஒரு பகுதியாக 20 விமான சர்வீஸ்களைக் குறைத்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மற்ற எல்லா விமான நிறுவனங்களை விடவும், கிங்பிஷ்ஷர்தான் மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மிகவும் தர்மசங்கடமான சூழலில் நிறுவனம் உள்ளது. எனவே உங்கள் சம்பளம் இந்த மாதம் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும் போது, நமது நிறுவனத் தலைவர் ஊரில் இல்லை என்பதையும், நிதி நெருக்கடியைச் சமாளிக்க தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், என கூறியுள்ளார் ஹிதேஷ் பட்டேல்.
கிங் பிஷர் நிறுவனத்துக்கு ரூ.8,000 கோடி கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications