காஷ்மீர் செக்ஸ் விவகாரம்-நடந்தது என்ன?
ஸ்ரீநகர்: 2002ம் ஆண்டு காங்கிரஸ்-முப்தி முகம்மத் சயீதின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார் முப்தி முகம்மத் சயீத். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.
இந் நிலையில் 2006ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஸ்ரீநகர் சிறுமியின் ஆபாச சிடிக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அந்தச் சிறுமியுடன் சில அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள் செக்ஸில் ஈடுபட்ட இரு ஆபாச சிடிக்கள் உலா வந்தன. செல்போன் கேமராவின் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோக்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்தி வந்தையடுத்து போலீசார் அந்த சிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது சபினா என்ற பெண் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது அந்த வீடியோவில் இருப்பது 8ம் வகுப்பு மாணவி என்றும் அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து செலுத்தி கற்பழிக்கப்பட்டு பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.
இந்தச் சிறுமியைத் தவிர மேலும் பல சிறுமிகள், இளம் பெண்களை சில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு சப்ளை' செய்ததாகவும் சபினா தெரிவித்தார்.
இதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருந்த ஜி.எம்.மிர், ராமன் மட்டூ, எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி, 10 போலீஸ் உயர் அதிகாரிகள், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, சில தொழிலபதிபர்களுக்கு தொடர்புள்ளதை சபினா தெரிவித்தார்.
மேலும் கிட்டத்தட்ட 50 பெண்களை சபினாவும் அவரது கும்பலும் வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காஷ்மீர் பெரும் கொந்தளி்ப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் சபினாவின் வீடுகளை மக்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த செக்ஸ் விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் மாநில அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் மாநில போலீசார் நியாயமான விசாரணை நடத்த மாட்டார்கள் என்றும், இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
நிலைமை சிக்கலானதால், அப்போதைய முதல்வர் குலாம்நபி ஆசாத் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.