செப். 27ம் தேதிக்கு சென்னை மாரத்தான் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறுவதாக இருந்த சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம், செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஜெர்மனியில், உலக தடகள சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் சென்னை மாரத்தான் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் சிலர் குளிர்காலத்தில் போட்டி நடைபெற்றால் நீண்ட தூரம் ஓடுவதற்கு வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனராம்.
இதையும் கருத்தில் கொண்டு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மூலம் வசூலாகும் பணத்தை அறப் பணிகளுக்கு செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications