2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- வானிலை மையம்
சென்னை: இன்றும், நாளையும் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கடும் வெப்பத்தைக் குறைக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக சென்னை நகரிலும், புறநகர்களிலும் பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட வெப்பம் வெகுவாகத் தணிந்து குளுமை குடியேறியுள்ளது.
நேற்றும் மாலையில் பரவலாக தூறல் மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் மழை காணப்பட்டது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 3 மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், இன்றும், நாளையும், சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.