பெண் ஊழியரை கட்டிப்பிடித்து 'இச்'.. ஏட்டு கைது
தஞ்சாவூர்: ரயில்வே பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதளூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஜெகதீசன் (53). இவர் நேற்று இரவு பூதளூர் ரயில்வே ஸ்டேஷனில் பணியில் இருந்தார்.
அப்போது, அவர் ரயில்வே ஊழியர் சந்தனமேரி (40) யை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தனமேரி கூச்சல் போடவே ஏட்டு ஜெகதீசனை சக ரயில்வே போலீசார் சுற்றி வளைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தார்.
கணவரைக் குத்திய மனைவி கைது
இதற்கிடையே, கும்பகோணத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் உள்ளிக்கான்சந்து நாடார் காலனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் முருகன்(36). இவரது மனைவி கங்கா (30).
கங்கா தனது கணவருக்கு தெரியாமல் தனது அண்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முருகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கங்கா கத்தியால் கணவரின் இடது விலாவில் குத்தினார். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
மனைவியிடம் குத்துப்பட்டு படுகாயமடைந்த முருகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.
பின்பு, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து கங்காவை கைது செய்தனர்.