ரயில் பஸ்-இலங்கைக்கு இந்தியா நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழர்கள் வாழும் பகுதிகளான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு நகரங்களை இணைக்கும் வகையிலான ரயில் பஸ் திட்டத்திற்கு இந்தியா ரூ. 27 மில்லியன் நிதியுதவியை அளிக்கவுள்ளது.

ரயில் பஸ் என்பது வழக்கமான பஸ்களை மாற்றியமைத்து ரயில்வே டிராக்கில் ஓடும் வகையில் மாற்றுவதாகும். இந்த ரயில் பஸ் உலகின் பல பகுதிகளில் உள்ளது. இந்த ரயில் பஸ் சாலையிலும் ஓடும், ரயில்வே டிராக்கிலும் ஓடும் வகையில் இருக்கும்.

இந்தத் திட்டம் இன்று மட்டக்களப்பில் தொடங்கி வைக்கப்பட்டது. அதில், இந்திய தூதர் அலோக் பிரசாத், இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ரயில் பஸ் திட்டத்தால் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் குறையும் என்றார் அழகப்பெருமா.

இந்தத் திட்டத்திற்காகக இந்திய அரசு இலங்கை மதிப்பில் ரூ. 44 மில்லியன் மதிப்பிலான 10 பஸ்களை வழங்கவுள்ளதாம். இதுதவிர ஐந்து பஸ்களை ரயில் பஸ்ஸாக மாற்றத் தேவையான 22 மில்லியன் ரூபாய் நிதியுதவியையும் செய்யவுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+