For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி: வெள்ளி, சனி, ஞாயிறு-வி.ஐ.பி. தரிசனம் ரத்து

By Staff
Google Oneindia Tamil News

Tirupathi
திருப்பதி: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த 3 நாட்களிலும் விரைவு தரிசனம் அமல்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலான பக்தர்கள் சரிவர தரிசனம் செய்ய முடியாமல் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய முடியும்.

இதற்கிடையே திருப்பதியில் வி.ஐ.பி. பக்தர்களை போல சாதாரண பக்தர்களும் சுவாமியின் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை ஏற்க தேவஸ்தான் மறுத்துவிட்டது.

இந்த உத்தரவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் முதல்வரின் உத்தரவுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களி்ல் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்

மேலும் சில உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து சாதாரண பக்தர்களுக்கு தற்போது உள்ள தரிசன முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X