For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவூதியில் தவித்து வரும் 400 தமிழக தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தவித்து வரும் தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் கனிமொழி பேசுகையில்,

ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜெட்டாவுக்கு வேலைக்குச் சென்ற அவர்கள் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு சரியான சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

400 இந்தியத் தொழிலாளர்களும் நாடு திரும்ப சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கேரளாவைச் சேர்ந்த பி.ஜே. குரியன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப் பிரச்னை குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X