ஒரிசாவில் ஐஏஎஸ் அதிகாரி - குடும்பத்தினர் நால்வர் சுட்டுத் தற்கொலை
பர்கார் (ஒரிசா): ஒரிசா மாநிலத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சுடப்பட்டதால் படுகாயமடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் ஊசலாடி வருகிறது.
ஒரிசா மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெகதானந்த பான்டா (50). இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, தற்போது மத்திய அரசுப் பணியில் உள்ளார்.
இன்று அதிகாலையில், பர்கார் மாவட்டம், தியோகாவன் என்ற இடத்தில் உள்ள பான்டாவின் வீட்டில் பான்டா, மனைவி சுரேகா பான்டா (46), தந்தை மனோசி பான்டா (75), சகோதரிகள் பிஜயலக்ஷ்மி (57), கிஷோரி மிஸ்ரா (54) ஆகியோர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்களுக்கு அருகே பான்டாவின் ரிவால்வர் கிடந்தது. வீட்டின் அனைத்துக் கதவுகளும் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது பான்டாவின் தாயார் வீட்டின் முதல் மாடியில் இருந்தார். சத்தம் கேட்டு அவர் ஓடி வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த பான்டாவின் 22 வயது மகன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் ஊசலாடி வருகிறது.
இது தற்கொலையைப் போல தோன்றுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் செயலாக தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications