சொத்துக் குவிப்பு - ஓ.பன்னீர் செல்வம் மீது குற்றப்பத்திரிக்கை
தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீதான வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்கள் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 2001 முதல் 2006 வரை பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார் ஓ.பி. பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது சில காலத்திற்கு முதல்வராகவும் இருந்தார்.
இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் பிரிவு போலீஸார், 2006-ம் ஆண்டு அவரது வீட்டைச் சோதனை செய்து, அதில் கிடைத்த ஆவணங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி உள்பட குடும்பத்தினர் 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 1,417 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு, அது தேனி முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணவள்ளியிடம் தாக்கல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications