காஷ்மீர் காட்டுக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக ஊடுறுவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. ஊடுறுவல்காரர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
பங்குஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இவர்கள் ஊடுறுவ முயன்றபோது அவர்களைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் சரணடைய முன்வராமல் தாக்கத் தொடங்கினர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இருப்பினும் அவர்கள் காட்டுப் பகுதிக்குள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications