For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் காட்டுக்குள் ஊடுறுவிய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக ஊடுறுவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது. ஊடுறுவல்காரர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

பங்குஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதி வழியாக இவர்கள் ஊடுறுவ முயன்றபோது அவர்களைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் சரணடைய முன்வராமல் தாக்கத் தொடங்கினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இருப்பினும் அவர்கள் காட்டுப் பகுதிக்குள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அந்தப் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X