யுஏஇ-வெளியேறுவோரில் தமிழர்களே அதிகம்
சென்னை: உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் சென்று அங்கிருந்து வெளியேறுவோரில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
உரிய ஆவணங்கள், முறையான விசா இல்லாமல் துபாய் உள்ளிட்ட யுஏஇ நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்லும் தமிழர்கள் அங்கிருந்து எமர்ஜென்சி சர்டிபிகேட் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது.
இந்த சர்டிபிகேட் இருந்தால் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் நாடு திரும்ப முடியும்.
இந்த சர்டிபிகேட் கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடந்த 7 மாதத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 812 பேர் எமெர்ஜென்சி சர்டிபிகேட் மூலம் நாடு திரும்பியிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 2,525 பேர் இந்த சர்டிபிகேட் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டவரைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சான்றிதழை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமரேட்சி்ல் சிதம்பரம், தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவி்ல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சர்வதேச பொருளாதார மந்த நிலையால் அங்கு கட்டுமானப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.
இதனால் இந்தப் பணியில் சேர அந் நாட்டுக்குச் செல்வோர் உரிய வேலை கிடைக்காமல் நாடு திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எமர்ஜென்சி சர்டிபிகேட்டை பயன்படுத்தி நாடு திரும்பியோரில் இந்த கட்டுமானப் பணியாளர்களே அதிகம்.
யுஏஇ நாட்டில் 15 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நாட்டில் வேலையை இழந்த அல்லது வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பாஸ்போர்ட்டையே ரூ. 30,000க்கு விற்றுவிடும் நிலையும் உள்ளது.
இவர்களைக் குறி வைத்து செயல்படும் கர்நாடகம்-கேரளத்தின் காசர்கோட்டைச் சேர்ந்த மாபியா-விபச்சார கும்பல் பாஸ்போர்ட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது.
பி்ன்னர் இந்தக் கும்பல் பாஸ்போர்ட்டை மோசடி செய்து தங்களது மற்றவர்களை துபாய்க்குள் வரச் செய்கிறது என்கின்றனர் துபாய் இந்திய தூதரக அதிகாரிகள்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
அந்த மனசுதான்.. துபாயில் தவித்த இந்தியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக கொடுத்த தொழிலதிபர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications