ஆதாரம் இல்லையாம்-சயீத்தை விடுவித்தது பாக். கோர்ட்
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளையான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அவரை விடுவித்து விட்டது.
ஹபீஸை விசாரிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை காலவரையின்றி ஒத்தி வைத்து விட்டது.
முன்னதாக ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதை எதிர்த்து அவரது சார்பில் தாக்கல் செய்யப்ட்ட மனுவை விசாரித்த பின்னரே இந்த தீர்ப்பை அறிவித்தது உச்சநீதிமன்றம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சயீத்தின் வக்கீல் டோகார், எனது கட்சிக்காரர் தற்போது ஒரு சுதந்திர மனிதர் ஆவார் என்றார்.
ஹபீஸுக்கும், மும்பை தாக்குதல் சம்பவத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து போதிய ஆதாரங்களுடன் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானிடம் கூறஇ வருகிறது. மேலும் சமீபத்தில் இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட விளக்க அறிக்கையிலும் கூட ஹபீஸுக்கு உள்ள தொடர்புகள் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் அலட்சியப் போக்கால், தற்போது ஹபீஸ் விடுதலையாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications