ஆஸி.யில் தாக்குதல் சதி-4 சோமாலிய தீவிரவாதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

Australia foils suicide terror plot
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் ராணுவ தளத்தின் மீது சோமாலிய தீவிரவாதிகள் நடத்தவிருந்த தற்கொலைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் உள்ள ராணுவத் தளத்தை துப்பாக்கிகளுடன் நுழைந்து தாக்க சோமாலிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஆஸ்திரேலிய தீவிரவாதத் தடுப்பு போலீசார், விக்டோரியா மாகாண போலீசார் இணைந்த 400 பேர் கொண்ட படை இன்று காலை மெல்போர்ன் நகரில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.

இதில் இருவர் சோமாலியாவையும் இருவர் லெபனானையும் சேர்ந்தவர்கள். அனைவரும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.

இந்தக் கும்பலை 7 மாதமாக கண்காணித்து வந்ததாகவும், இவர்கள் தாக்குதல் நடத்தப் போவது உறுதியானதையடுத்து கைது செய்ததாகவும் ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நால்வரும் சோமாலியாவின் அல்-சகாப் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+