நிதி நெருக்கடி-மாநில அரசுகளுக்கு உதவ பிரணாப் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு உதவ முடியாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
6வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதால் மாநில அரசுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மத்திய அரசு உதவுமா என்று கேட்கப்பட்டதற்கு மாநிலங்களவையில் முகர்ஜி பதிலளிக்கையில்,
நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க நியாயமாக மத்திய அரசு உதவ வேண்டும். ஆனால், மத்திய அரசே நெருக்கடியில் உள்ளதால் இந்த விஷயத்தில் எங்களால் உதவ முடியாத நிலை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications