எல் அன்ட் டி நிறுவனத்துக்கு என்.எல்.சியின் ரூ. 489 கோடி ஆர்டர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் தூத்துக்குடியில் அமைக்கவுள்ள மின் நிலையத்திற்கான பொறியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல் அன்ட் டி நிறுவனத்திற்கு ரூ. 489 கோடியிலான ஆர்டர் கிடைத்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடியில் அமையும் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கையாளும் பிரிவை எல் அன்ட் டி நிறுவனம் அமைத்துத் தரவுள்ளது.
தூத்துக்குடியில், தமிழக மின்வாரியத்துடன் இணைந்து என்எல்சி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்கிறது.
இந்த மின் உற்பத்திப் பிரிவுக்கான, நிலக்கரியைக் கையாளும் பிரிவை எல் அன்ட் டி அமைத்துத் தரவுள்ளது.
அனைத்து விதமான பொறியியல் பணிகள், கட்டுமானம், அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், மின்சார இணைப்புகள், மெக்கானிக்கல் பணிகள் உள்ளிட்டவற்றை எல் அன்ட் டி செய்து தரும்.












Click it and Unblock the Notifications