முகாம்களிலிருந்து 1000 தமிழர்கள் வெளியேற இலங்கை அனுமதி
வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 1000 தமிழர்கள் வெளியேற இலங்கை அரசு அனுமதித்துள்ளது.
கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இவர்கள் மின் வேலிகளால் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.
தற்போது இவர்களை படிப்படியாக மறு குடியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 1000 பேர் மறு குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.
இதுதொடர்பாக முகாமில் நடந்த நிகழ்ச்சியொன்றில், அதிபர் ராஜபக்சேவின் தம்பியான பசில் ராஜபக்சே, அவர்களுக்கு சிறப்பு உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இதையடுத்து ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய அந்த 1000 பேரும் தங்களது உடமைகளை கேன்வாஸ் பைகளில் எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இதுவரை வவுனியா முகாம்களில் தங்கியிருந்தவர்கள் ஆவர். வரும் வாரங்களில் மேலும் பலர் மறு குடியேற்றம் செய்ய்படுவார்கள் என்று பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தற்போது அனுப்பட்டுள்ளோரில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் மறு குடியேற்ற நடவடிக்கைகக்கு உட்படுத்தவில்லை.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications