ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவரது சொந்த ஊரான ஆலங்குளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற அவரது நண்பரும், ஆசிரியருமான பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
கல்வி நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக அருணாவுக்கும், ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அழகர், பாலா ஆகிய இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதேபோல தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அழகரும், பாலாவும் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிகள் பானுமதி, மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
அதன்படி எஸ்.ஏ. ராஜாவின் விடுதலை ரத்து செய்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாலா, அழகர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கண்ணன், பரமசிவன், அர்ஜூன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications