ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவரது சொந்த ஊரான ஆலங்குளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற அவரது நண்பரும், ஆசிரியருமான பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
கல்வி நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக அருணாவுக்கும், ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அழகர், பாலா ஆகிய இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதேபோல தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அழகரும், பாலாவும் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிகள் பானுமதி, மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
அதன்படி எஸ்.ஏ. ராஜாவின் விடுதலை ரத்து செய்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாலா, அழகர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கண்ணன், பரமசிவன், அர்ஜூன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications