4000 ரியாலுக்கு கொத்தடிமையாகி சவூதியில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி, குமரி இளைஞர்கள்
நெல்லை: சொன்ன வேலையை செய்கிறாயா... இல்லையா..உன்னை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம் எனக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட வாலிபர்களை தெருவை சுத்தம் செய்யும் கொத்தடிமைகளாக சவூதியில் வாட்டி வதைக்கும் திடுக்கிடும் தகவல் வெளியே தெரிய வந்துள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த மாவடிக்காலை சேர்ந்த சமுத்திரம், விரலக்குட்டி, ஆலங்குளம் அருகேயுள்ள பன்னீர்குளத்தை சேர்ந்த முருகன், பரமசிவன், கதிரேசன், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த நடராஜன், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த ராஜ பாண்டியன், குமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை சேர்ந்த ரகுமான், மற்றும் மதுரை, தஞ்சை, திருவண்ணாமலையை சேர்ந்த 21 பேர் ஒன்று சேர்ந்து சவூதியில் இருந்து இந்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
சவூதியில் தாங்கள் கொத்தடிமைகளாக இருப்பதாகவும், பல்வேறு சித்ரவதைகள் தாங்கமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் உடனே காப்பாற்றுங்கள் என்றும் பல பரபரப்பு தகவல்களை அவர்கள் எழுதியுள்ளனர். தங்கள் பாஸ்போர்ட் எண்களை எழுதி அனைவரும் கையெழுத்து போட்டு அனுப்பி உள்ளார்கள்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ள கண்ணீர் தகவல்கள் பின் வருமாறு..
எங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தருவதாக மும்பையில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் சவூதிக்கு வந்தோம். விமான நிலையம் மற்றும் மருத்துவமனையை சுத்தம் செய்யும் வேலை என்று கூறி அழைத்து வந்தனர். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு தெருகூட்டும் வேலை தந்துள்ளனர். நாங்கள் அனைவரும் இங்குள்ள தெருக்களை சுத்தம் செய்து வருகிறோம்.
இதற்கு சம்பளமாக ரூ.6 ஆயிரம் மட்டுமே தருகின்றனர். இந்த பணத்தை வைத்து சாப்பிட மட்டுமே முடிகிறது.
எங்களிடம் சொன்ன வேலையை கொடுங்கள் என்று கேட்டால் உங்களை 4 ஆயிரம் சவூதி ரியாலுக்கு விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம். நாங்கள் என்ன வேலை கொடுத்தாலும் செய்துதான் ஆக வேண்டும் என்கிறார்கள். யாராவது எதிர்த்து பேசினால் அவர்களை துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
தமிழர்கள் பலரை பைத்தியமாக மாற்றி உள்ளனர். உடனே எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் அங்கு இதுபோல் கொத்தடிமைகளாக போராடி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications