நொய்டா மாயாவதி பூங்காவில் மத்திய குழு ஆய்வு
டெல்லி: உ.பி. மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மாயாவதியின் ராட்சத சிலைகள் அடங்கிய பூங்காவை இன்று மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
நொய்டா, 15ஏ செக்டாரில் இந்த பிரமாண்ட பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்குள் மாயாவதியின் பிரமாண்டமான சிலைகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
இந்தப் பூங்காவுக்கு கெளதம புத்தா பூங்கா என்று பெயரிட்டுள்ளார் மாயாவதி. இந்த கட்டுமானப் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி விட்டதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டுமானம் நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி ஒரு சுற்றுச்சூழல் கமிட்டியை நியமித்தது.
இதையடுத்து இந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இன்று சம்பந்தப்பட்ட பூங்காவைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தப் பூங்கா, இந்தியாவின் மிக மிக அரிதான பறவைகள் வசித்து வரும் ஓக்லா பறவைகள் சரணாலயத்திற்கு 20 அடி தொலைவில் உள்ளது.
மேலும், பூங்கா அமைப்பதற்காக 20 ஆயிரம் மரங்களை வெட்டி தள்ளி விட்டார்கள் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பூங்கா வளாகத்திற்குள் மாயாவதி மற்றும் மறைந்த கன்ஷிராமின் 30 சிலைகள் உள்ளன.
மேலும், இந்த பூங்காவை அமைப்பதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியும் பெறப்படவில்லை.
இங்கு கட்டப்பட்டுள்ள பெரிய பெரிய கட்டடங்களால் அருகில் உள்ள பறவைள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications