கர்நாடகாவில் 300 கி.மீயில் புதிய 'ஸ்டீல் காரிடார்'!
சென்னை: புதிய முதலீடுகளை ஈர்க்க 300 கிமீ தூர 'ஸ்டீல் காரிடார்' அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் ரூ.20000 கோடியை ஈர்க்க முடியும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து வசதிகளும் நிரம்பியதாக உருவாக்கப்படும் இந்தப் பகுதியில் அணுமின்சக்தி நிலையம், உயர் வேக மின் ரயில் போக்குவரத்து மற்றும் துறைமுகம் ஒன்றும் அமையும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
இரும்புத்தாதுக்கள் நிரம்பிய பெல்லாரி - ஹோஸ்பேட் பகுதியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இதில் டாடா ல்டீல், என்எம்டிஏ, ஜேஎஸ்டபிள்யூ, பிரமானி போன்ற நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டுவதாக கர்நாடக மாநில உள்கட்டமைப்புத் துறை முதன்மைச் செயலாளர் வி மது தெரிவித்துள்ளார்.
இதற்கென 500 சதுர பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே 120 கிமீ நீளத்துக்கு ஹூப்ளி - அங்கோலா இடையே ரயில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தத்ரி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"இந்தப் பகுதியில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களை வைத்துப் பார்த்தால் ரூ.20000 கோடி முதலீடும், பல ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக வாய்ப்பிருக்கிறது", என்றார் மது












Click it and Unblock the Notifications