விசாரணைக்காக கேபியை இந்தியா கொண்டு வர சிபிஐ திட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கேபிக்கு நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தனு மற்றும் ஒற்றைக் கண் சிவராசனுக்குத் தேவையான ஆயுதங்களை கேபி மூலம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொடுத்தது.
அதேசமயம், கடந்த 1991ம் ஆண்டு சென்னையில் கேபி மீது ஆயுதக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கை வைத்து கேபியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க யோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
கேபி இந்தியா கொண்டு வரப்பட்டால், ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி என்ன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருந்தது, சர்வதேச சதி ஏதேனும் உண்டா என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணைக் குழு, அவரை விசாரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழக கடல் பகுதியில் டோம்நோவா என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படை பிடித்தது. விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் ஆயுதங்களை கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதிலிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டார்கள். 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி சென்னை துறைமுகத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தியதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக கேபி சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிக்கவில்லை என்பதால், 1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 11ம் தேதி அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
தற்போது கேபி பிடிபட்டுள்ளால் இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications