விசாரணைக்காக கேபியை இந்தியா கொண்டு வர சிபிஐ திட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கேபிக்கு நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தனு மற்றும் ஒற்றைக் கண் சிவராசனுக்குத் தேவையான ஆயுதங்களை கேபி மூலம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொடுத்தது.
அதேசமயம், கடந்த 1991ம் ஆண்டு சென்னையில் கேபி மீது ஆயுதக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கை வைத்து கேபியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க யோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
கேபி இந்தியா கொண்டு வரப்பட்டால், ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி என்ன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருந்தது, சர்வதேச சதி ஏதேனும் உண்டா என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணைக் குழு, அவரை விசாரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழக கடல் பகுதியில் டோம்நோவா என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படை பிடித்தது. விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் ஆயுதங்களை கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதிலிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டார்கள். 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி சென்னை துறைமுகத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தியதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக கேபி சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிக்கவில்லை என்பதால், 1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 11ம் தேதி அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
தற்போது கேபி பிடிபட்டுள்ளால் இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
2022 நிலைமைக்கு போகும் இலங்கை! எல்லாத்துக்கும் இந்த டிரம்ப்தான் காரணம்! மோசமாகும் நிலைமை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications