விசாரணைக்காக கேபியை இந்தியா கொண்டு வர சிபிஐ திட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கேபிக்கு நேரடியான தொடர்பு எதுவும் இல்லை. இருப்பினும், மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தனு மற்றும் ஒற்றைக் கண் சிவராசனுக்குத் தேவையான ஆயுதங்களை கேபி மூலம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுக் கொடுத்தது.
அதேசமயம், கடந்த 1991ம் ஆண்டு சென்னையில் கேபி மீது ஆயுதக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கை வைத்து கேபியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க யோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
கேபி இந்தியா கொண்டு வரப்பட்டால், ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி என்ன, யார் யாருக்கு இதில் தொடர்பு இருந்தது, சர்வதேச சதி ஏதேனும் உண்டா என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணைக் குழு, அவரை விசாரிக்கும் எனத் தெரிகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழக கடல் பகுதியில் டோம்நோவா என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படை பிடித்தது. விடுதலைப்புலிகளுக்காக அந்த கப்பல் ஆயுதங்களை கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதிலிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்த 10 பேரும் கைது செய்யப்பட்டார்கள். 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி சென்னை துறைமுகத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக ஆயுதங்களை கடத்தியதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதில் முதல் குற்றவாளியாக கேபி சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிக்கவில்லை என்பதால், 1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 11ம் தேதி அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
தற்போது கேபி பிடிபட்டுள்ளால் இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications