சென்னை நேரு ஸ்டேடியத்தில் கபடி வீரர் படுகொலை
சென்னை: சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியத்தில் கபடி வீரர் குத்திக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அகில இந்தியா கபடி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு விளையாடுவதற்காக அரியானா மாநிலத்தில் இருந்து 12 பேர் கொண்ட கபடி குழுவினர் சென்னை வந்தனர்.
அனைவரும் நேரு ஸ்டேடியத்தில் தங்கி இருக்கிறார்கள். நேற்று இரவு புழுக்கமாக இருந்ததால் மின் விசிறிக்குக் கீழே படுத்துத் தூங்குவது தொடர்பாக நவீன் (19) என்ற வீரருக்கும் சுமித் என்ற வீரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே வாய் வார்த்தை தடித்து அடிதடியாக மாறியது. அப்போது, சுமித் கையில் இருந்த கத்தியால் நவீன் வயிற்றில் குத்தினார். இதனால் நவீன் குடல் சரிந்தது.
ஆபத்தான நிலையி்ல் அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை நவீன் இறந்து போனார்.
இந்த திடீர் கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications